பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
ADDED :449 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பழநி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் மலைக்கோயில் செல்ல பல மணி நேரம் காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தால் புத்தர்கள் அவதிப்பட்டனர். சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு, அருள்ஜோதி வீதி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வாகன ஓட்டுனர்கள் அதிக சிரமம் அடைந்தனர்.