லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருபவித்ர உற்சவம்; கருட சேவை
ADDED :503 days ago
புதுச்சேரி; லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருபவித்ர உற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடந்தது. முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 53வது ஆண்டு திருபவித்ர உற்சவம் கடந்த 20ம் தேதி துவங்கியது.அன்று மூலவர், உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 92 திருவாராதனம் நடந்தது. நேற்று காலை தங்க கருடசேவை, பூர்ணாஹூதி, சாத்துமுறை, பவித்ர உற்சவ பூர்த்தி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.