தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :698 days ago
திருப்பூர்; தாளக்கரை பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. இதில் மூலவர் லட்சுமி நரசிம்மர் சந்தன காப்பு அலங்காரத்தில் தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.