கோவை கோயில்களில் சதுர்த்தி வழிபாடு; விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :453 days ago
கோவை; பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவிலில் உள்ள பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தில் இருக்கும் ஸ்ரீ வாராஹி மந்திராலயம் கோவிலில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.