சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :602 days ago
படப்பை; குன்றத்துார் அருகே சோமங்கலத்தில், 975 ஆண்டுகள் பழமையான சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆனி மாதம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.