உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் 108 பால் குடம்

பூவலை மாரியம்மனுக்கு பெண்கள் 108 பால் குடம்

கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, பூவலை கிராமத்தில் உள்ள அய்யர் தோட்டத்தில், யக்ஞ சீதளா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, இந்த கோவிலில் நேற்று, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பூவலை பெருமாள் கோவிலில் இருந்து, கிராம பெண்கள், 108 பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பின், கூழ்வார்த்தல் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !