உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா

மேலப்பெருங்கரை சதுரங்க நாயகி அம்மன் ஆடிப்பெருக்கு விழா

பரமக்குடி; பரமக்குடி அருகே உள்ள மேலப்பெருங்கரை கிராமத்தில் அருள்பாலிக்கும் சதுரங்க நாயகி அம்மன், சந்தன கருப்புசாமி கோயிலில் 21ம் ஆண்டு ஆடி 18ம் பெருக்கு விழா நடக்கிறது. இக்கோயிலில் ஜூலை 25 காலை கணபதி ஹோமம், கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். அன்று இரவு தொடங்கி தினமும் அபிஷேகம் மற்றும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் அருள் பாலிக்கிறார். நாளை மாலை 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடக்க உள்ளது‌. தொடர்ந்து ஆக., 3 அன்று காலை பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி நேர்த்திக் கடன் மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர். மேலும் ஆக., 4 காலை அம்மனுக்கு காப்பு களையப்பட்டு, பால அபிஷேகத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !