கிளிமுக முனிவர்
ADDED :446 days ago
மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் மேருமலைக்கு வந்த போது கிளிமுக முனிவரான சுகபிரம்மம் அவர்களிடம் ஆசி பெற்றார். அப்போது, ‘‘தாயே! மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தால் உன் அருள் கிடைக்கும்?’’ எனக் கேட்டார். ‘இனிமையாக பேசுதல், இருப்பதை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தல், சாந்தமுடன் பழகுதல், பணிவுடன் நடத்தல், பெண்களை மதித்தல், நல்லவர் உபதேசம் கேட்டல், மனம், மொழி, மெய்களால் துாய்மை காத்தல் ஆகிய பண்புகள் கொண்ட நல்லவர்களிடம் நிரந்தரமாக தங்கியிருப்பேன்’ என்றாள்.