உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

பத்ரகாளி அம்மன் கோவிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

 அனுப்பர்பாளையம்; குன்னத்துார் அடுத்த ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த முதல் தேதி, பத்ரகாளி அம்மனுக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !