உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க பல்லக்கில் சுவாமி வீதியுலா
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவத்தின் நான்காம் நாளான இன்று சுவாமி தங்க பல்லக்கில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வேணுகோபாலன் ஜெயந்தி மகோத்சவ விழா கடந்த 26ம் துவங்கியது. விழாவின் 4ம் நாளான இன்று காலை 5:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு வேணுகோபாலன் குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் தங்க பள்ளத்தில் வீதி எழுந்தருளி வீதி உலா நடந்தது. 11:00 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், திருவாய்மொழி சேவை, சாற்றுமறை நடந்தது. இரவு 7:30 மணிக்கு வேணுகோபாலன் பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளி வானவேடிக்கையுடன் வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.