உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரும்பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா

அரும்பாக்கம் கிருஷ்ணர் கோவிலில் ஜெயந்தி விழா

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபாலனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சகடையில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !