ஆவணி அமாவாசை ; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ADDED :479 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்த நிலையில் காலை 6:00 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் மதியம் 12:00 மணிக்கு மேல் அமாவாசை வழிபாடு பூஜைகள் நடந்தது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சன்னதியில் சிறப்பு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.