/
கோயில்கள் செய்திகள் / பிட்டுக்கு மண் சுமந்த விநாயகர்; பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கோலாகலம்
பிட்டுக்கு மண் சுமந்த விநாயகர்; பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED :366 days ago
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கோவிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் கற்பக விநாயகர் அருள்பாலித்தார்.பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஆக.29ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் எழுந்தருளி புறப்பாடு நடக்கிறது.இரவில் வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி வலம் நடக்கிறது. இன்று பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை செப்.6 மாலையில் தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். செப்.7 ல் காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.