பொள்ளாச்சி ஸ்வர்ண விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :473 days ago
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே கோட்டாம்பட்டி ஊராட்சி அருள்செல்வபுரத்தில் உள்ள ஸ்வர்ண விநாயகர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. தவிர, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி, கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சின்னபாலு தலைமையில் நடந்த விழாவில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.