உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்

வில்லியனுார்; வில்லியனுார் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளாட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.


வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ரங்கராஜன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில், தங்க தேர் செய்து வருகின்றனர். முதற்கட்டமாக அதற்கான மரத்தேர் வெள்ளோட்டம் இன்று நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி 26வது பட்டம் ராமாநுஜாச்சார்யார் ஜீயர் சுவாமிகள் மங்களா சாஸனம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன்,  தேனீ ஜெயக்குமார், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உட்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !