சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம்
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனை முன்னிட்டு இன்று காலை 6:20 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை 2 ஆயிரம் பக்தர்கள் மழையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வெயிலின் தாக்கம் குறைந்து மலையேற இதமான சூழல் நிலவியதாக பக்தர்கள் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடுகளை கோயில் பூசாரிகள் செய்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜ பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர் . வத்திராயிருப்பு, சாப்டுர் போலீசார் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.