உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னமலை கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி!

அன்னமலை கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி!

மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.காலை 7 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் புடைசூழ பவனி வந்தார். பின், வள்ளி, தெய்வானையுடன் திரு­மணம் நடக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்­ணாநந்தாஜி, ஸ்ரீ அனந்த­மகமாஹி அம்மா தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்­ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !