உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி கோவிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

புத்தேரி கோவிலில் சிறப்பு வழிபாடு; பக்தர்கள் தரிசனம்

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு நேற்று பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்; 5:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !