உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு புஷ்பவனேஷ்வரர் சன்னதி முன் லிங்க வடிவில் 108 சங்குகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு பூஜை நிறைவடைந்து புஷ்பவனேஷ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. சங்காபிஷேகத்தை செந்தில், ரமேஷ் , ஆனந்த் குருக்கள் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !