கார்த்திகை சோமவாரம்; அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :339 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு, சுவாமி சன்னதி முன் 1008 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை முதல் சோம வாரத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் xகருவறை எதிரில், சிறப்பு யாகசாலை அமைத்து, 1,008 சங்கு வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், 1,008 சங்கு மூலம் பூஜை செய்யப்பட்ட புனித நீரை கொண்டு, அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தங்க தேர்; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல மாதங்களுக்குப் பிறகு தங்க தேர் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் மூன்றாம் பிரகாரத்தில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர்.