உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாற்று வெள்ளத்தில் அடித்து வந்த 2 அடி உயர முருகன் கற்சிலை மீட்பு

செய்யாற்று வெள்ளத்தில் அடித்து வந்த 2 அடி உயர முருகன் கற்சிலை மீட்பு

செய்யாறு; செய்யாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட, 2 அடி உயர முருகன் கற்சிலையை வருவாய்த் துறையினர் மீட்டனர்.  திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் செய்யாற்றில், பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கன மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை, 3:00 மணியளவில், 2 அடி உயர, மயிலுடன் கூடிய குழந்தை முருகன் சிலை, ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. வருவாய்த் துறையினர் சம்பவ இடம் சென்று முருகன் சிலையை மீட்டு, அது எங்கிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்டது என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !