காஞ்சிபுரம் அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :304 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர், தாயார் உலோப முத்திரையுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அகத்திய மாமுனிவர் பிறந்த நட்சத்திரமான மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தை ஒட்டி, கிளாரில் இன்று குருபூஜை விழா நடந்தது. இதில், அகத்திய பெருமானுக்கும், தாயார் உலோப முத்திரை அம்பாளுக்கும் 108 சங்காபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. இதில், கிளார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.