நத்தம் கால பைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED :302 days ago
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. இதைப்போலவே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியிலும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.