சதுரகிரிக்கு நாளை முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
ADDED :280 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை டிசம்பர் 28ல் மார்கழி மாத பிரதோஷம், டிச.30ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இதனை முன்னிட்டு பக்தர்களை சுவாமி தரிசனம் செய்ய நாளை முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் அறிவித்துள்ளார்.