உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

சாத்துார்; விருதுநகர் மாவட்டம் சாத்துார் வட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது. கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பரம்பரை பூஜாரிகள் முன்னிலையில் கோசாலை உண்டியல் உள்பட 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் கோயில் பணியாளர்கள் அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். ரொக்கம் ரூ 31,97,806. தங்கம் 89 . 100 கிராம், வெள்ளி 425.300 கிராம்காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தி இருந்தனர்.இந்தத் தொகை உடனடியாக கோயில் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !