பழநி கோவிலில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை
                              ADDED :283 days ago 
                            
                          
                          
பழநி; பழநி கோவிலில் குரோதி ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் குரோதி ஆண்டு தை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மலைக்கோயிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. திருவாவினன்குடி பெரியநாயகி அம்மன் கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி கோயிலில் பாதையாத்திரை பக்தர்கள் ஏராளமானோர் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.