உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் அசைவ பிரசாதம்

திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் அசைவ பிரசாதம்

திருமங்கலம்; திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலில் பொங்கல் விழா நடந்தது . தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் குடும்பத்துடன் இக்கிராமத்தில் ஒன்று கூடி திருவிழா கொண்டாடுவர். நேற்று மாலை முனியாண்டி சாமிக்கு பெண்கள் மலர் தட்டுகளை தலையில் சுமந்து வந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து இரவில் 100 ஆடுகள், 300 சேவல்கள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்யப்பட்டு அங்கு வந்தவர்களுக்கு சம பந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.  தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறி குழம்பு என விதவிதமான அசைவ குழம்பு தயாரித்து வருகின்ற பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !