உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா

பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா நடைபெற உள்ளது.


சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் இயங்கி வருகிறது பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.இங்கு வருகிற ஜனவரி 23-ம் தேதி வியாழக்கிழமை முதல் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் ஆன்மிக திருவிழா நடைபெறுகிறது. இதில் பிரம்மகுமாரிகள் வித்யாலய உள் அரங்கில் 12 ஜோதிலிங்கம் மற்றும் அஷ்ட லெட்சுமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.மேலும் இதில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்றும், பிரசாதம் வழங்கப்படுவதகாவும் தொடர்ந்து பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரம்மா குமாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !