ஆனந்தமலை முருகன் கோவில் கிருத்திகை சிறப்பு பூஜை
ADDED :4801 days ago
ஊட்டி: ஊட்டி அருகே எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை, ஏழுஹெத்தையம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 10.00 மணிக்கு சித்தி செல்வ விநாயகர், ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தையம்மன்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 11.00 மணிக்கு சிங்காரி குழுவினரின் பஜனை, 12.00 மணிக்கு அரக்கோணம் சுவாமி கிருஷ்ணாநந்த , தஞ்சை அருளாளர் திருமுருக ஆனந்தசித்தர், சாந்தி வனம் மடாலயம் அன்பு சுந்தர சுவாமி, பெள்ளன் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.