தை அமாவாசை; கடலுாரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ADDED :294 days ago
கடலுார்; கடலுார் சில்வர் பீச்சில் தை அமாவாசையை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தை, ஆடி மற்றும் மாகாளய அமாவாசை நாட்களில் கடற்கரை உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தால், சந்ததியினர் வாழ்கை மேம்படும் என்பது ஐ தீகம். நேற்று தை அமாவாசை என்பதால் இறந்த முன்னோர்களுக்கு கடலுார், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் ஏராளமானோர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.