மாசி சோமவாரம்; ஆபத்சகாய லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை
ADDED :387 days ago
கோவை; மாசி மாதம் முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஆபத்சகாய லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், பூஜைகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.