காட்டு மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா; தீர்த்த குட ஊர்வலம்
                              ADDED :237 days ago 
                            
                          
                          
அவிநாசி; ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
ராயம்பாளையம் ஸ்ரீ காட்டு மாரியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழாவில்,கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதல்,கம்பம் நடுதல் நடைபெற்றது. பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக காட்டு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். வரும் 13ம் தேதி, அம்மன் அழைத்தல், விளக்கு மாவு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் அபிஷேக பூஜைகள் சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து கரகம் எடுத்து வருதல், தீபாராதனை ஆகியவை நடைபெறும். பொங்கல் பூச்சாட்டு விழாவின், நிறைவு நிகழ்ச்சியாக 14ம் தேதி மஞ்சள் நீர் விழா நடைபெறுகிறது.