உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மகம்; சக்கரபாணி கோவில் தேரோட்டம்.. பக்தர்கள் வடம் பிடித்தனர்

மாசி மகம்; சக்கரபாணி கோவில் தேரோட்டம்.. பக்தர்கள் வடம் பிடித்தனர்

தஞ்சாவூர் - மாசிமகத்தையொட்டி கும்பகோணம், சக்கரபாணி கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களான சக்கரபாணி  கோவில், ஆதிவராக பெருமாள் கோவில், ராஜகோபாலசாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில்,  கடந்த 4ம் மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான இன்று (12ம் தேதி), சக்கரபாணி கோவில்  தேரோட்டம் நடைபெற்றது. தேரில், சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சக்கர ராஜா, சக்கரராஜா என கோஷமிட்டப்படி, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !