பழநி முருகன் கோயிலில் சங்காபிஷேகம்; 1008 வலம்புரி சங்கு வைத்து யாக பூஜை
ADDED :226 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. 1008 வலம்புரி சங்குகளில் புனிதநீர் நிரப்பி, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க வேள்வி நடைபெற்றது. இதில் அமிர்தலிங்கம் குருக்கள், செல்வசுப்ரமணியம் குருக்கள் குழுவினர் பங்கேற்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.