உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மச்சாரி பிள்ளைகள்!

பிரம்மச்சாரி பிள்ளைகள்!

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறிகளின் உஷ்ணத்தை வாயுவால் தாங்க முடியவில்லை. அதனை வாயு கங்கையில் உள்ள நாணற்காட்டில் சேர்த்தார். சரவணம் என்னும் நாணற்காட்டில் அப்பொறிகள் ஆறும் 6 குழந்தைகளாக மாறின. கங்கையில் பிறந்ததால் முருகனுக்கு காங்கேயன் என்ற பெயர் உண்டானது. இதற்கு கங்கையின் மைந்தன் என்று பொருள்.  கங்கைக்கும், சந்தனுராஜாவுக்கும் பிறந்தவர் பீஷ்மர். கங்கையின் மைந்தன் என்பதால் இவருக்கும் காங்கேயன் என்று பெயருண்டு. தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொள்வதற்காக பீஷ்மர் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர். உத்ராயண காலம் வரை தன்னுயிர் துறக்காமல் காத்திருந்தார். வடமாநிலங்களில் கங்கையின் பிள்ளைகளான இருவரையும் பிரம்மச்சாரிகள் என்பர். ஆம்...அங்கே வள்ளி தெய்வானையுடன் முருகன் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !