உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷம்; சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும்!

பிரதோஷம்; சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு அமையும்!

சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷம். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பான பலனை தரும். அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சிவன் கோயில்களில் மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பு. காரணம் இந்த பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள். இந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது. இன்று சிவனை வழிபடுவோம்.. துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு பெறுவோம்..!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !