/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா : உற்சவர் வீதி உலா
ADDED :183 days ago
திருச்சி: பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம், வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத் திருநாளில் அவதரித்தார் ராமானுஜர். ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவ ஆச்சாரியார் இராமனுஜரின் ஜென்ம நட்சத்திரமான சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று காலை உற்சவர் இராமனுஜர் திருவீதி உலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.