திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம்; மன்மத தகனம்
ADDED :308 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ மன்மத தகனம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ நிறைவையொட்டி, தங்க கொடிமரம் அருகே நடந்த மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்காக பெரிய அளவிலான மன்மத பொம்மை கொண்டு வரப்பட்டது. தங்க கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்
தங்க கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.