புதுச்சத்திரம் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம்
ADDED :209 days ago
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் சிலம்பியம்மன் கோவிலில் வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடந்தது. விழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் சுவாமி வீதியுலாவுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முத்து பல்லாக்கு உற்சவம் வரும் 24ம் தேதி நடக்கிறது. அன்று இரவு 7.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு முத்து பல்லாக்கு அம்மன் வீதி உலா, 26 ம் தேதி மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.