பாலையூர் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா
ADDED :1 days ago
காரைக்குடி: கண்டனூர் பாலையூரில் மகாலட்சுமி கோயிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது.
கண்டனூர் பாலையூரில் மகாலட்சுமி கோயில் உள்ளது. இங்கு நேற்று லட்சார்ச்சனை விழா விமரிசையாக நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இன்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் காரைக்குடி கண்டனூர் பாலையூர் புதுவயல் பள்ளத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து இரவு தெய்வீக நாடா நிகழ்ச்சியில் நடந்தது.