உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

விழுப்புரம்; மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத்  திருவிழா நடந்தது.  மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர்,  மூலவர், நவகிரக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 12:00  மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். 12:30 மணிக்கு சண்முகா அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !