உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவில்களில் கிருத்திகை பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

வால்பாறை கோவில்களில் கிருத்திகை பூஜை பக்தர்கள் திரளாக பங்கேற்பு

வால்பாறை; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடந்த கிருத்திகை பூஜையில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன் பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிஷேக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி முருகனை மகிழ்வித்தனர். இதே போல் முடீஸ் சுப்பிரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கிருத்திகை நாளான நேற்று சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !