வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED :96 days ago
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நத்தம் அண்ணாமலையார் கோயில் வாராகி அம்மன்,கோவில்பட்டி பாமாருக்மணி வேணு ராஜகோபாலசுவாமி கோயிலில் வாராஹி அம்மன், அசோக்நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வாராகி அம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.