உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமும் ஒரு அம்மன்: நிம்மதியான பயணத்திற்கு...

தினமும் ஒரு அம்மன்: நிம்மதியான பயணத்திற்கு...

நிம்மதியான பயணத்திற்கு... கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி மாரியம்மனை தரிசிப்போம்.  

முன்பு வியாபாரி ஒருவர் சந்தையில் உப்பு மூடை வாங்கி வந்தார். அப்போது அசரீரியாக, ‘உப்பு மூடையில் குடியிருக்கும் எனக்கு கோயில் கட்டு’ என மாரியம்மன் உத்தரவிட்டாள். அதன்படியே கோயில் கட்டப்பட்டது. மூலவர் சுயம்பு வடிவத்திலும், உற்ஸவர் பீடத்தில் உலோக சிலையாகவும் உள்ளனர்.

கிருஷ்ணகிரி – காவேரிப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இக்கோயில் உள்ளது. அம்மனுக்கு நெய்தீபம் ஏற்றினால் கிரக தோஷம் தீரும். செவ்வாய் தோஷம் தீர அரளிமாலை சாத்துகின்றனர். திருமணம், குழந்தை வரம் பெற பொங்கல் வைக்கின்றனர். விருப்பம் நிறைவேற செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை விரதமிருந்து தரிசிக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் துலாபார நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

அமாவாசை, பவுர்ணமி அன்று தரிசிப்பது சிறப்பு. ஆடிப்பெருக்கு, நவராத்திரி விழாக்கள் விசேஷமானவை.   

எப்படி செல்வது: கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94420 06759, 94426 47152


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !