உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலிக்கின்றனர். இங்கு வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் திருமண தடை நீங்கும்; நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !