ஆவணி மூல திருவிழாவிற்கு திருமறைநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் புறப்பட்டார்
                              ADDED :59 days ago 
                            
                          
                          
மேலூர், மதுரையில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவிற்கு இன்று திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பட்டார். செப்.2ல் நரியை பரியாக்கிய திருவிளையாடல், செப். 3 பிட்டுக்கு மண் சுமப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு செப். 11 ல் திருவாதவூர் கோயிலுக்கு திரும்புகிறார். இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.