உடுமலை சஞ்சீவராய பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கார பூஜை
ADDED :227 days ago
உடுமலை; புரட்டாசி மாத பிறப்பையொட்டி, கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய புரட்டாசி மாதத்தில், மக்கள் விரதம் கடைபிடிப்பது வழக்கம். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், வைணவ ஆலயங்களில், பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இம்மாத பிறப்பையொட்டி, கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவிலில், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.