உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மதுர காளியம்மனுக்கு மண்டல பூஜை

அன்னூர் மதுர காளியம்மனுக்கு மண்டல பூஜை

அன்னூர்; மதுரகாளியம்மன் கோவில் மண்டல பூஜை நேற்று இரவு நடந்தது.


லக்கே பாளையம் கோவில் பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. ஈஞ்சங்குலத்தாரின் குலதெய்வமான இக்கோவிலில் புதிதாக முழுவதும் கருங்கற்களால் கருவறை வசந்த மண்டபம் மகா மண்டபம் பரிவார தெய்வங்களுக்கான சன்னதி ஆகியவை கட்டப்பட்டு கடந்த 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாட்கள் மண்டல பூஜை 5ம் தேதி துவங்கியது. நேற்று இரவு சிறப்பு மண்டல பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !