உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

செஞ்சி; கிழவன்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.


மேல்மலையனூர் அடுத்த கிழவன்பூண்டி கிராமத்தில் முனீஸ்வரன், அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆக., 4ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் ஊரணி பொங்கலும், யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அம்மசசாரம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !