உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி வெள்ளி; சிங்காநல்லூர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

புரட்டாசி வெள்ளி; சிங்காநல்லூர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை; கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்துடன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !